பூத்திடும் வனமாகும்

பூச்சரமவள் கார்க்குழலினில் காற்றொடுகலைந் தாடும்
***பூக்களின்மண மீர்த்திடுமவன் மூச்சுடனுற வாடும் !
பாக்களின்சுவை கூட்டிடும்சுகம் பாற்கடலலை போலும்
***பாட்டெழுதிட ஊற்றெனவரும் வார்த்தைகளலை மோதும் !
கீச்சிடுமொழி கேட்டதும்செவி பேச்சினிமையில் சொக்கும்
***கீற்றசைந்திட ஆட்டியவளி பூப்பனித்துளி சொட்டும் !
வீச்சொடுவிழும் காட்டருவியின் கூச்சலுமிசை யாகும்
***வேட்கையில்குழல் மீட்டிடவுளம் பூத்திடுவன மாகும் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Jun-18, 11:58 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

மேலே