காட்டு மனிதா காட்டு

======================
நீட்டிப் படுக்கையில் நின்றுவிடு மாவியினை
பூட்டி அடைத்து புதுவாழ்வு கொண்டவர்யார்
காட்டு மனிதனே காட்டு.
***
மூட்டி எரித்துவிட முற்றும் கரியாகும்
காட்டை அடைந்தவர் கால்நடக்கக் கண்டிருந்தால்
காட்டு மனிதனே காட்டு.
****
நாட்டை அரசாண்டு நாசம் இழைத்தவர்
கூட்டு உயிர்போகக் கொண்டுசென்ற தின்னதெனக்
காட்டு மனிதனே காட்டு.
******

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Jun-18, 2:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 90

மேலே