சேருமிடம் தான் வேறுபடும்

சுதந்திர இந்தியாவின்
தேசீய பறவை ஒன்று
பறவைப் பூங்காவில் சிறை,
நாலு பக்கக் கூண்டுக்குள்
நலிவுறும் ஒரு உயிர்

காட்டு வசதிகள்
கைவிட்டு போனபின்
சுகத்தை இழந்து
சோகத்தை சுமந்து
சோர்ந்து கிடக்கிறது

வலிமை இல்லாததால்
குறை இருந்தும்
குரல் எழுப்பவில்லை
இரை இல்லாமையா?—இல்லை
இந்திய அஹிம்சை வழியா?,

தேசீய பறவைக்கு
தெரியாமலா இருக்கும்
இரண்டுக்கும் விடுதலை
கிடைக்குமென்று—ஆனால்
சேருமிடம் தான் வேறுபடும்.

எழுதியவர் : கோ. கணபதி. (1-Jul-18, 4:21 pm)
பார்வை : 48

மேலே