மாலை நேரத்து கிறக்கத்திலே

மஞ்சல் அரைத்து சிவந்த
முகத்தில் பூசிய கோளம்
அதோ வானம் ரம்மியமாய்
தோற்றமளிக்குதே
இது ஒரு அழகிய மாலை நேரம்
இக்கனமே என் நெஞ்சில்
ஓடிய அவளின் நினைவை
விரட்டிப் பிடித்தேன்

மாலை நேரத்து கிறக்கத்திலே
உன் விரல் பிடிக்கட்டுமா
என்றேன்.....

மாலை நேரத்து கிறக்கத்திலே
உன் மடி சாயவா என்றேன்....

மாலை நேரத்து கிறக்கத்திலே
விழி மூடாது உன்னை
பார்க்கட்டுமா என்றேன்

கிறுக்கனே என்று சிரித்தாள்
சிறுக்கியவள் எனக்குள்
இருந்து கொண்டு.....!!!

மாலை

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (18-Jul-18, 6:41 pm)
பார்வை : 50

மேலே