விளைநிலத்தின் கதறல்

நம்பிவந்தோரை வாழவைக்கும் விளைநிலம்...

இயற்கையை விற்கும் கயவர்களைகக் கண்டு விளைநிலம் கதறுகிறது...

பொய்த்துப்போன மழையை எண்ணி கதறுகிறது...

பசியாற்றிய தன்னை விலைபேசும் நன்றிகெட்ட மனிதர்களைக் கண்டு கதறுகிறது...

மலடாக்கி தன்னை பாழ்படுத்தும் உரங்களைக் கண்டு கதறுகிறது...

வீணான திட்டங்களால் வரப்போகும் அழிவை எண்ணி கதறுகிறது...

விளைந்தே பழக்கப்பட்ட விளைநிலம் தன் வீழ்ச்சியைக் கண்டு கதறுகிறது...

எழுதியவர் : ஜான் (22-Jul-18, 7:53 am)
பார்வை : 258

மேலே