வீரத்தமிழச்சி

தரணி ஆளப்பிறந்த வீரத்தமிழச்சி...

வீண்பேச்சுகளுக்கு செவிசாய்க்க மாட்டாள்...

வெட்டி நியாயங்களில் வீழ்ந்துவிட மாட்டாள்...

மூடநம்பிக்கைகளை முறித்தெறிந்து செல்வாள்...

பண்பாடுகளை பத்திரமாய் காப்பாள்...

அதிகாரம் செய்தால் அடங்கிப்போக மாட்டாள்...

ஆணவப்பேச்சுகளை அலட்சியம் செய்வாள்...

உழைப்பை நம்பி சாதித்து காட்டுவாள்...

உலகின் முன்னோடி தமிழின் மகள் எம் வீரத்தமிழச்சி...

எழுதியவர் : ஜான் (31-Jul-18, 10:50 am)
பார்வை : 248

மேலே