தேன்கிண்ணம்


உதடுகள்
மொழி பேசும்
இசைபாடும்
புன்னகையின்
புத்தகமாய்
விரியும்
ஞானியை போல்
மௌனத்தில்
தவமும்
புரியும்

உறவாடும்
உள்ளங்களுக்கு
இரவில்
தேன் கிண்ணமும்
ஆகும்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-11, 12:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 295

மேலே