கண்களின் மொழி - 2

எதிர்பார்க்காமல் கிடைக்கும் எதுவாயினும் மதிப்பிழக்கும்
கண்ணீர் அதற்கு விதிவிலக்கல்ல.

உன்னை பற்றி சிந்திப்பவர்களுக்காக கண்ணீர் சிந்து
அது அன்பை வெளிக்காட்டும்.

உன்னை புரிந்துகொள்பவர்களுக்காக கண்ணீர் சிந்து
அது உணர்வுகளின் ஆழத்தை
உணர்ச்சியின் வேகத்தோடு விலக்கி கூறும்.

உனது அன்பை உணரா இடத்திலும், தகுதியற்றவர்களிடமும்
காட்டினால் ஏமாற்றம் நிச்சயம் உன் மனதிற்கு தான் -
பாவம் அதற்கும் கண்கள் தான் முதலில் கலங்கும்.

கண்ணீர் வழியை குறைக்க வந்த வரம்
வரத்தை வீணாக்காதீர் !

நம்மை உணர்ந்து பக்குவப்படுத்த வாழ்க்கை எடுக்கும் பாடம்
கற்றுக்கொள்ளுங்கள், தேவையற்று கலங்கவைக்காதீர்கள்.

எழுதியவர் : ஸ்ரீ (17-Aug-18, 7:48 am)
சேர்த்தது : ஸ்ரீஷா
பார்வை : 131

மேலே