ரயில் பயணங்களில்

முழு நீள ரயில்வண்டி மூச்சிரைக்க வந்து நின்று ஆசுவாசப்படுத்தி கொண்டது...

ஒன்றரை மணிநேரம் தாமதமான கோபத்தில் மக்கள் திட்டி தீர்த்து கிடைத்த பெட்டியில் ஏறி இடம் பிடித்த பின் அமர எனக்கும் கிடைததொரு இடம்...

ஜன்னலோர இருக்கை கிடைக்காத சோகம் எல்லோரையும் போல எனக்கும்...

மனம் தேற்றி கிடைத்த இடத்தில் அமர்ந்ததும் புறப்பட தயாரானது ரயில்...

ரயில் நகர்ந்து செல்ல சமோசே... குரல் கேட்டு திரும்பிய திசையில் ஒரு வியாபாரி...

ஒட்டுமொத்தமாப் விற்று தீர்த்துவிடும் யோசனையில் அவன்...சத்தம் ரயிலின் ஓசையை அடிக்கியது...

காடு மலை தாண்டி மிதந்து வரும் ரயிலில் சாதிகள் தெரிவது இல்லை...
மதமும் மறைந்து சமத்துவம் தெரிகிறது...

நீண்ட நேர பயணத்திற்கு பின் மூச்சிறைத்து மீண்டும் நிற்க நான் இறங்கி கையசைத்ததும் சென்றது ரயில்....

எழுதியவர் : சந்தோஷ் (17-Aug-18, 5:25 pm)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : rail payanangalil
பார்வை : 125

மேலே