எட்டு வழிச்சாலை---பாடல்---

வைகறையில் வைகை கரையில் மெட்டில் :


பல்லவி :

என் விதியில் செய்யும் சதிகள்
வென்றால் இறப்பேன் உன் வழியில்... (2)
பொன் வயலில் செல்லும் தார் ஒழுகும்
சாலை அழிக்கும் பூமரங்கள்...

என் விதியில்...


சரணம் 1 :

உன் வினையால் நிலமோ?... ஒழியும்
என் பசியால் வயிறோ?... கிழியும்
செய்தொழிலில் இருளே நுழையும்
வாழ்வினில்தான் கனலே வழியும்

நெருப்பினில் தந்தை பாய் விரித்தால்
பூவைக்கும் கூந்தல் தாயிழப்பாள்

கொன்றே வளர்ந்தால் நானழிவேன்...

என் விதியில்...


சரணம் 2 :

சோலையில் ஆலைகள் தோன்றுவதில்
நோய்களைத் தந்திடும் சாபம் கண்டேன்...
சாலைகள் ஏருழும் பூமிகளில்
போடுதல் செய்திடும் பாவம் என்பேன்...

உரிமையை இங்கே பறிப்பது ஏன்...
கடமையை நீயோ?... மறப்பது ஏன்...

உளிபோல் நெஞ்சை உடைப்பதுமேன்...

என் விதியில்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 5:25 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 648

மேலே