காதல்

என் கண்ணில் விழுந்தவளே
கண் மூடி திறக்கும் முன் மறைந்தாயே

நொடி பொழுதில் என்னுள் பதிந்தவளே
என் விதி மாறும் முன் தொலைந்தாயே

என்றோ இந்த சாலையில் உனை கண்டேனே.....
அந்த வேளை முதல் இங்கேயே கிடை கொண்டேனே ...

என் ஏக்கம் போக்க நான் உனை பார்க்க வருவாயா...
இல்லை என் மனம் தாக்க ஏமாற்றம் ஒன்றே தருவாயா.....

எழுதியவர் : அருண் குமார் (25-Aug-18, 7:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 509

மேலே