மதி
பல சரக்கு கடைக்கு
பலவாறு முன் பணம் கட்டியதால்
இன்று
இனிப்பு நீர்
வீர வரவேற்பு செய்கிறது.....
இரத்த அழுத்தமும்
கண் பார்வை மங்கி வழிய .....என்னவோ
ஏற்றுமதியும் இறக்குமதியும்
வரும்படிக்கு வழிகோளும்...
எண்ணம் வாக்கு செயல்
சுத்தமாக கடைபிடிக்க
ஏன் இந்த பீடை தீண்டுகிறது ....
முன் சென்ம கூற்று மறைக்கப் பட்டதை
எந்த பல சரக்குக் கடையில்
நான் கண்டெடுப்பது !
என் முன்னோர்கள் மூலதனத்தை மீட்டெடுக்க
தடயங்கள் காணோமே ....
வந்ததே எனக்கு பீடை
வரதட்சனை வாங்காமலே !