ஏங்குகிறேன் உன்னைக்காண

ஏங்குகிறேன்
உன்னைக் காண!

தூய காதலை சுமக்கும்
என் நெஞ்சினை
தூக்கி எறிந்திட துணிந்தாயோ?
உன்னை அணு அணுவாய்
நேசித்தவன் இவன்தானென
அறிந்திராயோ?

ஏங்குகிறேன்
உன்னைக் காண!

உனக்காக நான் எழுதிய
கவிதைகளை
எரித்திட முனைந்தாயோ?
என் மேலிருந்த யுன்காதலை
முறித்திட விழைந்தாயோ?

திசை அறியேனே!உன்
செய்கைகளால் நான்
விசை இழந்தேனே!

ஏங்குகிறேன்
உன்னைக்காண!

காதலெனும் இக் கண்ணாடியை
உடைத்திடாதே! எதற்கும்
காலம்தான் மருந்தென்பதை
மறந்திடாதே!

எனைச்சேர காரணம் எதுவென்று சொன்ன நீதான்
ஏதும் கூறாமல் பிரிந்திட
நினைக்கலாமோ?
அப்பிரிவினை என்நெஞ்சம்
தாங்கிடுமோ?

ஏங்குகிறேன்
உன்னைக்காண!

என்னருகில் நீ இருந்தால்
வானை அளக்க நினைத்தவன்
எதிர்கால வாழ்க்கையை
நினைத்து அழுகிறேன்!என்
எதிரே நீ வர அழைக்கிறேன்!

ஏங்குகிறேன்
உன்னைக்காண!நீ
ஏற்க வேண்டும்
நல் வாழ்வைக்காண

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (3-Sep-18, 1:48 am)
பார்வை : 2191

மேலே