பூவும் பூவையும்

பூவும் பூவையும்.....

இரண்டுமே ஒன்றுதான்
மணத்தினால் மனதினால்

பூவும் அது இதழ்கள் மலர்ந்திட
வளி வழியே இதம் தேடும்
பூவையிவள் இதழ்கள் மலர்ந்திட
விதி மதியை வென்று வருவாள்

காட்டில் வளரும் பூவும்
என்றும் யாரையும்
எதிர்பார்ப்பது இல்லை

நாட்டில் வாழும் பூவைக்கும்
பாதுகாப்பு என்று
இன்று மிகவும் இல்லை

வீட்டு மலர்கள் துணிவாய் சிரித்திட
மனிதன் மனம் விரும்புவது போல

நெருப்பில் எரியும்
விட்டில் பூச்சிகளாய்-இன்றும்
வீட்டில் அடைந்து
வீழ்ந்து தான் போகிறார்கள்-சில
ஈழ மங்கைகள்

அழகாய் மலர்வதால்
அதிவேகத்தில் சந்தையில் விலைபோகும் அழகு மலர்கள்

அழகாய் இருந்தாலும்
அபத்தமாய் இருந்தாலும்-சில
ஆண்களின் கண்களுக்கு
விருந்தாகாமல் வரமாட்டாள்
இந்த அறிய இன மங்கையும்


வாழும் நாட்கள் சில காலம் எனினும்
வாசம் வீசாமல் மடிவது இல்லை

காயாகி கனியாகி
பலப்பல சேவையாற்றி
சருகாகி போனாலும்

பூவும் பூவையும்
போற்றுபவர்கள் சிலரே

இந்த உண்மை அறிந்தவர்
புவியில் உள்ளாரே

எழுதியவர் : Shagira Banu (16-Sep-18, 11:39 am)
சேர்த்தது : Shagira Banu
Tanglish : poovum poovaiyum
பார்வை : 62

மேலே