நடந்தது என்ன

அந்த அழகிய கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த காட்சி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மலைகளும் காடுகளுமாய் இருந்தன…அங்கு தான் நம்ப கதாநாயகியை பார்க்க நம்ப கதாநாயகன் மருது தன் நண்பர்களுடன் சென்றான். அவளை பார்த்து பல மாதங்கள் ஆகியன எனவே அவளை சந்திக்க சென்றான்…..

மாப்பிள்ளை…என்னடா இது இவ்வளவு காடா இருக்கு இங்க போய் கூட்டிட்டு வந்துருக…
அட இரு மச்சி….அவளை பாத்து பேசிட்டு போயிடலாம் …அவனது நண்பர்கள் கூட்டத்துடன் நடந்தே சென்றான்…..
இதோ ஒரு மலை தெரியுது அங்க தான் அவ வீடு இருக்கும்…..என்று நினைத்து கொண்டிருக்க அவ்வழி வந்த வழி போக்கன்…தம்பி இந்த பக்கம் எங்க வந்திங்க…இங்க வரக்கூடாது என்று கூறினான்…
ஏன???
அதுவா…..அங்க பாருங்க அந்த மலை தெரியுது ல அந்த மலையை சுத்தி ஆவி நடமாட்டம் இருப்பதா சொல்லிக்குறாங்க…..

என்னது????😢
அட ஆமா தம்பி….
அங்க தானே என் காதலி வீடு…அப்படி தான் அவளும் சொன்னா…
என்ன தம்பி யார ஏமாத்துரிங்க….அங்க எந்த குடும்பமும் இல்லை…….யாரோ தப்பா முகவரி குடுத்துருக்காங்க…..
அப்படியா??????
ஆமா…..
சரி அப்படின்னா….நீங்க எங்க இங்க போறிங்க…….???
ஹாஹா ஹாஹா…..நான் என் மனைவியை பாக்க போறன் நாங்க இரண்டு பேரும் செத்து 4 வருஷம் ஆச்சு……
மருதுவும் அவனது நண்பர்களும் பயத்தில் நடுங்கினர்..அந்த இடத்தை விட்டு ஓடினர்……பின்னாடியே மருதுவின் காதலி துரத்தினாள் ….ஆனால் உண்மையில் அவர்கள் பின்னே யாரும் தெரியவில்லை……
பயத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்தான் மருது…….அலரி அடித்து கொண்டு…ச்சி எல்லாம் கனவா……😀😀😀😀

எழுதியவர் : Bhagyasivakumar (17-Sep-18, 4:01 pm)
Tanglish : nadanthathu yenna
பார்வை : 1340

மேலே