நாக்கு

..... *நாக்கு* . .....
😛😛😛😛😛😛😛😛

எலும்பெனக்கு இல்லையடா
எப்படியும் திரும்பிடுவேன்
சினமெனக்கு வந்து விட்டால்
வாயை விட்டும் வெளி வருவேன்..

நுனி நாக்கை வலமாக்க
நூறுமுறை தேன்குளிப்பேன்
சனி நாக்கில் அமர்ந்து விட்டால்
சண்டையையும் வரவழைப்பேன்..

அனைத்து வகை சுவைகளையும்
அறிந்துனக்குச் சொல்லிடுவேன்
சூடாக சுவையாக
சுவைத்து நானும் மகிழ்ந்திடுவேன்..

பசி எனக்கு வந்துவிட்டால்
ருசி கூட மறந்திடுவேன்
கிசுகிசுக்கள் பேசும் போது
காதோரம் சென்றிணைவேன்..

விருந்தென்று சொன்னாலே
விரும்பி அதை ஏற்றிடுவேன்
மருந்தென்று சொன்னால்தான்
மலைத்து சற்று மறைந்திடுவேன்

உணவருந்த மட்டும் நான்
உயிர் வாழவில்லையடா
மொழி ஆளும் வளத்தாலே--உன்
சொல் பேசும் வள்ளலடா..

பேப்பரிலே கருத்தெழுத பேனாவை கொடுத்தது போல்
மனக்கருத்தை வெளிப்படுத்த படைக்கப்பட்டேன் நான் உனக்கு..

நல்ல சொற்கள் பேசும்போது
நான் தானே சாமியடா
கேட்போரின் மனசுக்குள்
நான் பசுமரத்து ஆணியடா..

கெட்ட சொற்கள் பேச
வைத்தால்
கிடைப்பதெல்லாம் தீமையடா
அதைப்பேச நானும் மருத்துவிட்டால்--நீ
வாழ்நாளும் ஊமையடா..

ஒரு நொடியும் அழுக்கின்றி
உமிழ்நீரில் குளித்திருப்பேன்
உண்மை மட்டும் பேசும்போது
பளிச்சென்று கருத்துரைப்பேன்..

தாம்பூலம் எனக்களித்தால்
தக தகன்னு சிவந்திடுவேன்
மாங்காயைப் பார்த்ததுமே
மல மலன்னு வியர்த்தொழுவேன்..

தப்பு தண்டா செஞ்சாக்கூட
தாங்கிக்குவே நாக்கு அண்ணே
பொய் புரட்டு பேசச் சொன்னால்
உளறி கொட்டி நான் அழுவேன்..

ஆண்டவன் என்மேல் வந்து விட்டால்
அருள்வாக்கு சொல்லிடுவேன்
மாண்டவர் என்மேல் வந்து விட்டால்
பேயோட்ட நான் அழுவேன்

தூக்கத்தில சில வார்த்தை
சொல்லிடுவேன் தெரியாம
விடிஞ்சதுமே கிடைக்கும் பார்
வேண்டிய அளவு மரியாதை

நாவடக்க கத்துகிட்டா
நல்லுடம்பு உனக்கப்பா
நாவை அடக்க கற்றாலே
நல்லவன்னு பெயரப்பா...

க.செல்வராசு..

😛😛😛😛😛😛😛😛😛

எழுதியவர் : க.செல்வராசு (24-Sep-18, 11:48 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : naakku
பார்வை : 451

மேலே