உயர்ந்த உணர்வுகளே
நாம் இறைவனைத்
தொழும் போது;
சங்கீதம் கேட்கும் போதும்,
ரசிக்கும் போதும்;
எல்லையில்லா ஆனந்தம்
கொள்ளும் போது;
கனவுகள் காணும் போதும்,
காதலன் காதலியை
முத்தமிடும் போதும்;
கண்களை மெதுவாக
மூடிக் கொள்வது இயல்பே!
அது சுகமே!
வாழ்வின் உன்னதமான
செயல்களும், தருணங்களும்
கண்களில் தோன்றும்
காட்சிகள் மட்டுமல்ல!
உள்ளத்தால் உணரப்படும்
உயர்ந்த உணர்வுகளே!
உயர்ந்த உணர்வுகளே!
நாமிறைவ னைத்தொழும் போது,
சங்கீதம் கேட்கும் போது,
இங்கிதமாய் ரசிக்கும் போதும்;
எல்லையில்லா ஆனந்தம் கொள்வோம்! 1
கனவுகள் காண்கின்ற போதும்,
காதலன் முத்தமிடும் போதும்;
காதலி கண்களை மெதுவாக
மூடிக்கொள் வதியல்பும் சுகமுமே! 2
வாழ்வின் உன்னதச் செயல்கள்,
தருணங்கள் கண்களில் தோன்றும்
காட்சிகள் மட்டுமல்ல! உள்ளத்தால்
உணரப்படும் உயர்ந்த உணர்வுகளே! 3