முள்ளி வாய்க்கால் மூடிப் போகாதோ?

பசியோடு திரிகின்ற தமிழ்ப்
பச்சிளம் பிள்ளைகள் மீது
சோற்றுப் பொட்டலங்களை
எறிந்து விளையாடும் சிங்கள
அதிகார வர்க்கம்
தினம் தினம் அவமானத்தை
மலமாக நினைத்து
அவர்கள் மீது வீசி விளையாடி
சந்தோஷிக்கும் போதெல்லாம்...

"சதிகாரச் சிங்களர்களே!
எங்கள் இனத்தை அழிக்கும்
தினத்தைக் குறித்துக்கொண்டு வந்தீர்களே
அந்த சண்டாள நாளாம்
இறுதிநாட்போரின் போதாவது
சரமாரியாய்க் குண்டு வீசியதற்குப் பதிலாக
சரியாகக் குண்டு வீசி
எங்களையெல்லாம் மொத்தமாகக்
கொன்று இருக்கக் கூடாதா ?

இல்லை முல்லை தீவு மொத்தமும்தான்
மூடிப் போய் இருக்கக் கூடாதா?

வாழும் தமிழர்களே!
இந்தப் பாழும் தமிழருக்காக ஏதாவது செய்ய நினைத்தால்
முள்ளி வாய்க்கால் மூடிப் போக
கூடிப் பிரார்த்தியுங்கள் ...
இல்லையென்றால்
குவிந்து கிடக்கும் எங்கள்
பிணக் குவியலின் முன்னே
மெழுவர்த்தி ஏற்ற வாருங்கள்",

இதுதான் ஈழத்தில் வாழும்
தமிழரின் எண்ணமாக இருக்கிறது
இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது ?

எழுதியவர் : முத்து நாடன் (21-Aug-11, 11:57 pm)
பார்வை : 421

மேலே