இச்சுத் தா இச்சுத் தா

ஏன்டா மணிமாறா, உன் மனைவிக்கு அவங்க குலம் தெய்வம் பேர்ல கருப்பாயின்னு பேரு வச்சுட்டாங்க. நல்லா தெரியும் செவச்செவனு
அழகா இருக்கிற புள்ளைக்குப் போயி கருப்பாயின்னு பேரு வச்சுட்டாங்க. அவ பெரிய படிப்பு படிச்சிட்டு மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறா. நம்ம ஊரில அவ வயசு உள்ள ஒரு பையன, பொண்ணுப் பேருகூட தமிழ்ப் பேரா இல்ல. எல்லாருக்கும் இந்திப் பேரத்தான் வச்சிருக்கிறாங்க. எல்லாம் அந்த சினிமா வந்து எல்லாத்தையும் கெடுத்திருச்சு. அவ வேலை பாக்கற எடத்த பெருக்க வேலைக்கார பொண்ணுகூட கருப்பாயிங்கற இவ பேரச் சொல்லி கிண்டல் பண்ணீட்டு இருக்கிறாளாம். நம்ம கருப்பாயிக்கு அதக் கேக்கற போது அவுளக்கு எவ்வளவு வேதனையா இருக்கும். இந்தக் காலத்தில தமிழ்ப் பேர வச்சா யாரும் மதிக்கமாட்டாங்க. நல்ல இந்திப் பேரா வச்சிருடா மணிமாறா.

பாட்டிம்மா எங் கருப்பாயிச் செல்லத்துப் பேர போனவாரமெ 'இஷிதா' -ன்னு மாத்தி அரசிதழ்ல வெளியிட்டாச்சு. இனிமே அவள நீங்ககூட ' இஷிதா' -ன்னுதான் கூப்படணும்.

என்னது, இச்சுத் தாவா. ஏன்டா மணிமாறா பாக்கற பசங்கெல்லாம் அவள இச்சுத் தா, இச்சுத் தான்னு பாட்டுப் பாடறதுக்கா அந்தப் பேர வச்சே?

பாட்டிம்மா உங்களுக்கு அந்தப் பேர சரியா சொல்லத் தெரில. யாராவது பசங்க அவள 'இச்சுத் தா' -ன்னு சொன்னா அவன் மூணு மாசம் சத்துணுவு (களி, சுண்டல், வேர்க்கடலை) தின்னத்தான் போகணும். சட்டம் பெண்களுக்கு ரொம்ப பாதுகாப்பா இருக்குது.

என்னமோ அப்பா. என்னால அவ பேர இச்சுத் தான்னுதான் கூப்பட முடியும்.

வீட்டுலதானே. பராவல்ல பாட்டிம்மா

எழுதியவர் : மலர் (10-Oct-18, 3:07 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 170

மேலே