ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குடிக்காதீர் அன்று
குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்
இன்று !

கிடைக்கின்றது வணிகருக்கு
கிடைக்கவில்லை உழவருக்கு
இலாபம் !

காவலர் நிற்குமிடங்களில்
அணியப்படுகிறது
தலைக்கவசம் !

பேசுவதில்லை வணிக வளாகங்களில்
பேசுகின்றனர் எளியவர்களிடம்
பேரம் !

நடுங்க வைத்தது
சபல புத்திக்காரர்களை
நானும்தான் இயக்கம் ( ME TOO )

நடக்கவில்லை விபத்து
சுற்றுச்சுவரை உடைத்தும்
விமானம் !

தாமாக வந்தால் நிலைக்கும்
தானாக சேர்த்தால் நிலைக்காது
புகழ் !

இறைத்திட ஊரும் கிணறு
படித்திட வளரும்
அறிவு !

விரும்பிச் செய்தால்
வராது வெறுப்பு
வேலை !

எழுத்தில் எழும்
ஐயம் தீர்ப்பாள்
மனைவி !

ஆலயம் செல்லும் போராட்டம்
அன்று நடந்ததால் கிடைத்தது
அனைவருக்கும் வாய்ப்பு !

அரசியலாக்கி வருகின்றனர்
கேரளத்தில்
ஐயப்பனை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Oct-18, 10:41 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 132

மேலே