நம்பியே நாதனை நம்பு
நம்பியே நாதனை நம்பு
****************************************
கும்பிக்குக் கொட்டிடக் கூழின்றிப் போனாலே
வெம்பியே வேதனையில் வெந்து தணிவாயே
நம்நெஞ்சுக் கொன்றுமற்றால் நன்றாமோ ? நன்மைவர
நம்பியே நாதனை நம்பு !