நம் தலைமுறை காணுமா
-------------------------------------
உழுதவன் அழுகிறான்
உணவுக்கு அலைகிறான்
உயிர்வாழ துடிக்கிறான்
உலகையே வெறுக்கிறான் ...
ஏழையோ ஏங்குகிறான்
ஏக்கத்தால் உருகுகிறான்
ஏற்றமின்றித் தவிக்கிறான்
ஏய்ப்பவனோ உயர்கிறான் ...
படித்தவனும் தேடுகிறான்
பம்பரமாய் சுழல்கிறான்
பணியின்றி வருந்துகிறான்
பட்டினியால் சாகிறான் ...
உழைப்பவன் தேய்கிறான்
உண்மையாய் வாழ்கிறான்
உள்ளாற்றல் மறக்கிறான்
உள்ளத்தால் சாய்கிறான் ...
சுழன்றிடும் புவனமும்
நின்றிடுமா ஒருநாள் ?
தீர்க்கப்படா தீர்வுகளும்
நீர்த்திடாமல் தீர்ந்திடுமா ...
கவலையே எனக்கு
கறைபடா கரம்காணவே !
நம்தலைமுறை காணுமா
நம்பிக்கை குறையுதே !
பழனி குமார்
01.11.2018