காதல் பிரிவில் நான்

எந்தன் காதலி ...
என்னை பாரடி ...
கண்களில் ஏனோ உன்னால் நீரடி ...
காயம் செய்கிறாய் ‌‌‌‌...
மாயம் செய்கறாய் ...
இருந்தும் என்னை பார்த்து ஒளிகிறாய் ...
வேண்டாம் இந்த அக்கப்போறு ..
நீயும் வந்து என்னை சேரு ...
பாயும் ஒளியாய் வந்தாயே ...
உன்னை பார்க்கும் விழியென காத்தேனே ...
காந்தம் போல எனை ஈர்த்து ...
இன்று சாந்தம் செய்து போனாயே ...
உலகம் என்னும் உருண்டையில் உன் உருவம் தேடி அலைகிறேன் ...
காதல் தர்மம் நீ தந்தால் என் வாழ்க்கை நானும் தொடர்கிறேன் ...

எழுதியவர் : M. Santhakumar . (4-Nov-18, 12:13 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 552

மேலே