தமிழன்னை

கருவறை சுமந்த மழலையவள்
அமுதமொழி ஒரழகு ! - அவள்
திருவாய் மலரும் தமிழுளறல்
கான மொழியோ பேரழகு !


பொங்கி பெருகிடும் காவேரியவள்
தடைகொன்ற நடையழகு ! பாதையை
பங்கிட்டு செழித்திட்ட தமிழன்னைதன்
பசுமைப் போர்வையோ பேரழகு !

எழுதியவர் : சேவியர் (16-Nov-18, 3:03 pm)
சேர்த்தது : xavier arun
பார்வை : 208

மேலே