இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை ‘ --------’நானும்’ இயக்கம் Mee Too --------------கவிதை

ஒரு மீ டூ கவிதை
எழுதட்டுமா என்றேன்

மீம்ஸ் போடுவார்கள்
மிரட்டினர் நட்புகள்

மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது

ஞாயிற்றுக் கிழமை என்பதால்
மீ டூ உடன்
மீனும் சேர்ந்து கொண்டது.

மீன் 2-வைப் பார்த்துக் கேட்டது
மீன் 1
மீ டூ மீ டூ என்றால் என்ன?

மீன் 2 சொன்னது
மீ டூ மீ டூ என்றால்..

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றானே பாரதி
அதுதான் மீ டூ

புரிந்த மீன் 1
தெளிந்து கேட்டது..

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றாயே பாரதி... ஒருசில
மாதர் செய்யும் மடமையை
யார் கொளுத்துவது?

மீனிங் புரிந்த மீன் 2
இது மீ டூ பிரச்சனை என்று
மீண்டது.

இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை


-பா.விஜய்

எழுதியவர் : (16-Nov-18, 5:51 pm)
பார்வை : 43

மேலே