என்னை இயக்கும் கள்வனே

யாருமற்ற இடத்தில்
என்னை சுற்றி
இயற்கையின் அழகில் !!!
உன்னையே நினைத்து நினைத்து
ஏங்கும் இதயத்தால்
நான் இயங்குகிறேன் தினமும் ....!

நொடிகளும் உருண்டு ஓட
உன் நினைவால்
என்னை மறக்கிறேன் .....
என்னை மறந்து சில நேரம் சிரிக்கிறேன்
உன் முகம் காணும்
என் கனவால் ...!

கேட்கும் காதல் பாடலின்
வரிகள் யாவும்
நமக்காக எழுதியது போல் தோன்றுவது ஏனோ ?

என்னை சுற்றி கேட்கும் குரல்கள்
எதுவும் என் செவிகள் வர மறுக்கிறது ,
உன்னுடன் பேசும் வார்த்தைகள் மட்டும் என் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ....

என் நினைவிலும் நீயே
என் கனவிலும் நீயே
மூச்சு காற்றில் வாழ்ந்த நான்
இன்று உன் நினைவுகளால் வாழ்கிறேனடா ....!

என்னையும் என் உயிரையும் இயக்கும்
என் கள்வனே
உன் கை சேரும் நாட்கள் தான் எங்கோ ?

எழுதியவர் : Deepikasukkiriappan (10-Dec-18, 9:35 am)
பார்வை : 783

மேலே