என்ன செய்யப் போகிறாய்
வெடித்து அழ நேரம் பார்க்கிறது
வேதனையில் வெதும்பிய மனம்!
தடுக்கிறது அதைத் தற்காலிகமாய்
தன்மானமும் தடித்து வளர்ந்த மீசையும்!
இயன்றவரை இதயம் நொறுக்கி
எனை வியந்து போகச் செய்த
என் விதியே!
இன்னும் என்னவெல்லாம்
செய்யக் காத்திருக்கிறாய்
எஞ்சியிருக்கும் என் நெஞ்சுரமும்
பஞ்சாய் பறக்கும்படி?