தேவ மங்கை
அவள் தன்
மைக்கண்ணால்
என் நெஞ்சத்து காதல் செடிக்கு
யூரியா உரமிட்டுச் செல்லும்
மயூரியா
நிலாவிற்கு
அமாவாசை வரும்
காலா தெருவிற்கு
வரும்போதெல்லாம்
அவள் என் தலைமுறைக்கு
அம்மாவாகவேண்டும் என்ற
ஆசை வருகின்றது
அங்கே அழகிகள்
மாநாடு நடந்துகொண்டிருந்தது
இங்கே இவள் வீட்டு
மானோடு விளையாடி நடந்துகொண்டிருந்தாள்
இவள் தோட்டத்துச்
செடியில் விழுந்த இடி
இறங்காமல்
செடியின் மடியில்
உறங்கியது