உன்னோடு நான் வரவே
துளி துளியாய் தூரல் கருமேகம் பொழிய குயிலின் கூவல் குறுகியதே .
அலை அலையாய் காற்று அடிநெஞ்சில் அடிக்க புயலொன்று என்னுள் கிளம்பியதே .
சிறுகு எல்லாமே சிறகாய் உருவெடுக்க இறக்கை முளைத்ததே நான் வானில் பறக்க .
மழைச்சிலையாய் நீயும் வானில் இருக்க நான் அமர்ந்து கொண்டேன் உனை அணைக்க .
உன்னோடு நான் வரவே உன் கடைக்கண்கள் எனை கூப்பிடுதே .
உன் கைகள் நான் கோர்க்க உன் உதடு நகத்தை கடிக்கிறதே .
வானம் மொத்தம் வான் நீர் சொட்ட இயற்கை மடியில் இருமணம் இணையுதே .
கருமேகம் கூடி மின்னல் கொட்ட காதல் விழியில் மின்னல் பிறக்குதே.