உன்னோடு நான் வரவே

துளி துளியாய் தூரல் கருமேகம் பொழிய குயிலின் கூவல் குறுகியதே .

அலை அலையாய் காற்று அடிநெஞ்சில் அடிக்க புயலொன்று என்னுள் கிளம்பியதே .

சிறுகு எல்லாமே சிறகாய் உருவெடுக்க இறக்கை முளைத்ததே நான் வானில் பறக்க .

மழைச்சிலையாய் நீயும் வானில் இருக்க நான் அமர்ந்து கொண்டேன் உனை அணைக்க .

உன்னோடு நான் வரவே உன் கடைக்கண்கள் எனை கூப்பிடுதே .
உன் கைகள் நான் கோர்க்க உன் உதடு நகத்தை கடிக்கிறதே .

வானம் மொத்தம் வான் நீர் சொட்ட இயற்கை மடியில் இருமணம் இணையுதே .

கருமேகம் கூடி மின்னல் கொட்ட காதல் விழியில் மின்னல் பிறக்குதே.

எழுதியவர் : M. Santhakumar . (23-Dec-18, 3:51 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 504

மேலே