நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் அவர்பெருமை நொய்தாகும் – நன்னெறி 5

நேரிசை வெண்பா

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் – பூக்குழலாய்!
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம். 5 - நன்னெறி

பொருள்:

பூங்குழலை உடையவளே!

நெல்லிலிருந்து பிரிந்த உமி மீண்டும் அதனோடு சேர்ந்தாலும் முன்புபோல் திடமாக இருக்காது.

அது போலவே பிரிந்த இருவர் மீண்டும் சேர்ந்தாலும் அந்த நட்பு அற்பமாகவே இருக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-19, 3:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 257

மேலே