கடலே அனையம்யாம் கல்வியால் என்னும் செருக்கு - நன்னெறி 7

நேரிசை வெண்பா

கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலே றனையசெருக்(கு) ஆழ்த்தி - விடலே
முனிக்(கு)அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும். 7 - நன்னெறி

பொருளுரை:

ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய கடலும் முனிவர்களுக்குத் தலைவராகிய அகத்தியமுனிவர் கையால் மொண்டு பருகப்படும்.

ஆதலால், நாம் கல்விப் பெருமையால் கடலை நிகர்ப்போம் என்று வலிமை பொருந்திய ஆண் சிங்கத்திற்கு இணை நாமென்ற செருக்கிலே உங்களை அவிழ்த்தி விடாதீர்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-19, 9:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே