அரசை எதிர்த்து போராட்டம்

நிறுத்துவதற்காக மட்டுமே அல்ல
நிலைமையை சொல்வதற்காகவே- ஊழியர்கள்
பலன் பெறுவதற்கே வேலை நிறுத்தம்- என்ற
பயனற்ற வார்த்தையால் பயனில்லை

அரசாங்க நலன்களை அடுத்தவனுக்கு தாரை வார்க்க-அரசு
அதிகார துஷ்பிரயோகம் செய்வதை கேட்கும்
அரிதான உண்மை ஊழியர்களே உண்டு என
ஆற்றல் உள்ளவராய் நாங்கள் உத்வேகத்துடன்

பார்த்தும் கேட்டும் பயந்தும் தான் இந்த
வேலைநிறுத்த பரிவட்ட போராட்டம்
காரணம் கணக்கிலாடங்காதது என்றாலும் - எதிர்காலத்தை
காக்கும் கருவியாகவே இந்த கடும்போராட்டம்.
---நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Jan-19, 12:05 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 806

மேலே