அவன் தனிமையில்
அவளும் அவனும் ஊடல் போரில்.....
அவனுக்கு அவள் மேல் ஏதோ ஓர்
சந்தேகம் கொண்டான்...அதை
சொல்லாமலே அவன் தினமும்
கண்ணால் ஏறித்தான் அவளை
நேற்றுவரை காதலியே கண்ணம்மா
என்றெல்லாம் பாடி அவளை
வலம் வந்தவன் மௌனியானான்
நொந்து நொறுங்கிய மனம் கொண்ட அவள்
இப்போது அவனோடு பேச மறந்தால்
அவன் தந்த வழிகள் நெஞ்சைத்தாக்க
அவனை விட்டு விட்டு எங்கோ மறைந்து போனாள்
தனிமை இப்போது அவனை வெகுவே வாட்ட
இரவும் வந்தது ..... கடல் மணல் மீது அவன்....
இருள் சூழும் இரவு , தாரகைகள் இல்லை வானில்
மேகமும் இல்லை, அமாவாசை இரவு சந்திரனும் இல்லை
எங்கும் இருள் , கடல் அலைகள் ஓசை காதில் விழுந்தது
இருளில் கடல் நீரும் காணவில்லை ...........
இருள் கவ்விய இரவு..... அக்னிபூச்சிகளின் சஞ்சாரம்
அங்கும் இங்குமாய் அவள் உள்ளத்து துயர்களின்
கூவல் பறப்பதுபோல்............................
அதுவோ இலையுதிர்க்காலம்....................
மணலில் ஓர் தனிமரம் இலைத்துறந்து தனிமையில்
ஓர் விதவை அபலைப்போல்.................
மணலில் உட்கார்ந்து விண்ணை நோக்கினான் அவன்
அங்கும் எங்கும் இருளே .......
அவைமீது வீணே சந்தேகம்கொண்ட அவன் உள்ளம்போல
தனிமை இப்போது வெகுவே வாட்டியது அவனை
இப்போது அவள் அவன் மனதில் தோன்ற
அவள் அவன் மனதைத் துறந்து தனிமையை நாடி
எங்கோ பறந்துபோனாள்.........................
காதலில் சந்தேகம் துயர் தரும் துன்பம் தரும்
தனிமையை மட்டும் சேர்க்கும் இனிமையைத் துறக்க