வீழ்ந்தது போலொரு கற்பனை அஞ்சலி நமுத்துசாமி

அஜயன்பாலா

வலைத்தளம்


Search here...
புதியப்பதிவுகள்எழுத்துசினிமாநூல்கள்ஊடகப்பதிவுபுகைப்படங்கள்என்னைப்பற்றிதொடர்புகொள்ள
(நாடகக்கலையின் ஆலமரம் ந. முத்துசாமி தோற்றம் முதல் மறைவு வரை ஒரு குறுஞ்சித்திரம்) –


ந. முத்துசாமி என்றால் உங்களில் பலர் யார் அவரு என கேட்கலாம் ஆனால் விஜய் சேதுபதி, பசுபதி, விமல் , வித்தார்த், என வெறுமனே பெயரைச் சொன்னாலே உங்கள் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக விரியத்துவங்குவதை பார்க்க முடிகிறது. . ஆமாம் அவர்கள் உருவாக காரண்மாக இருந்த ஆசான் தான் இந்த கூத்துப்ப்ட்டறை நா. முத்துசாமி. உங்களை சொல்லி குற்றமில்லை .. தமிழ் நாட்டின் டிசைன் அப்படி . தமிழ் பண்பாட்டிற்காக வாழ்வை அர்ப்பணித்த ஒரு மகத்தான கலைஞனை அறிமுகப்படுத்த சினிமா தான் தேவையாக இருக்கிறது

சென்னை சின்மயா நகரில் உள்ள அவரது வீட்டில் சட்டென சுவாசப்பை தன் வேலையை நிறுத்திக் கொண்டதால் சடலாமாகிப்போன நா. முத்துசாமிக்கு ஆறடிக்கும் அதிகமான நெடு நெடு உயரமான தோற்றம். நரைத்த மீசைதான் ஆனாலும் முறுக்கிகிடக்கும் அதன் நறுவிசும் பளிச்சென வசீகரிக்கும் கோழிமுட்டை கண்களும் யாரையும் ஒரு நிமிடம் நின்று பார்க்கவைக்கும் .. வாங்க அஜயன் பாலா சவுக்கியமா இருக்கீங்களா ? என சின்ன உபசரிப்பைக்கூட கம்பீர்மாக உரத்த குரலில் அவர் கேட்கும் பாங்கு தமிழ் நாட்டில் வேறு எவரிடமும் பார்க்கவே முடியாதது

நடிகனுக்கு குரல் அவசியம் . எதையுமே அவன் உரக்க பேசி பழகினாதான் அவனால அட்டென்ஷனை உருவாக்க முடியும் என முதற் சந்திப்பின் போது அவர் என்னிடம் சொன்னது எனக்கு இன்னமும் நினைவுக்கு வருகிறது



நா. முத்துசாமி என பழக்கமானது அவரது கதைகள் மூலமாகத்தான் . நீர்மை தொகுப்பை முதன் ,முதலாக வாசித்த போது வரது மொழி ஆளுமையாலும் புனைவாற்றலாலும் வசீகரம் கொண்டேன் . அவ்வப்போது நாடக நிகழ்வுளில் அவரை சந்திக்க நேர்ந்தாலும் முதன் முதலாக 2002 வாக்கில்தான் அவரோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிட்டியது. குமுதம் தீராநதி இதழுக்காக பரத நாட்டியத்தை புதுமையான முறையில் உலகமெங்கும் கொண்டிசென்ற நடனமங்கை சந்திரலேகாவை பேட்டி காண தளவாய் சுந்த்ரம் அழைப்பின் பேரில் பெசண்ட நகர் பீச்சில் இருக்கும் ஸ்பேசஸ் அரங்கிற்கு இலக்கிய நண்பர்களோடு சென்ற போது எங்களோடு அவரும் ஆட்டோவில் வந்தார் . சந்திரலேகாவுடன் அவருக்கு பல வருடம் நெருங்கிய நட்பு இருந்த காரணத்தா;ல் ஒரு வசதிக்கு அவரையும் அழைத்திருந்த்தாக தளவாய் சுந்தரம் சொன்னார். அவரும் வயதில் மிகவும் இளையவர்க:ள் என கருதாமல் எங்களோடு ஆட்டோவில் பயணித்து வந்தது மறக்க முடியாத அனுபவம்

அந்த பயணத்தின் போதுதான் நான் அவரிடம் அசட்டுத்தனமாக பல கேள்விகள் கேட்க அனைத்திற்கும் அவர் பொறுமையாக விடையுறுத்தார் . அப்போதே அவருக்கு வயது எழுபது ஆகியிருந்தது . ஆனாலும் பேச்சிலும் தோற்றத்திலும் கம்பீரத்தில் குறைவில்லை

தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்த முத்துசாமி இலக்கியம் எழுத்து மீதான் ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்து டாஃபேயில் வேலைக்கு சேர்ந்து கொண்டவர் .வேலை நேரம் போக மீத நேரங்களில் இலக்கியப்பித்து பிடித்து சிறுபத்ரிக்கை கும்பலுடன் சேர்ந்து பொழுதை கழித்த்வருக்கு சி சு செல்லப்பாவின் நட்பு கிட்டியது. அப்போது அவர் ந்ஃஅடத்திய எழுத்து பத்ரிக்கை யில் சிறுகதை எழுதிவந்த போது சி மணி, ஞானகூத்தன் , வீராச்சாமி என மேலும் பல நண்பர்கள் பழக்கமாகினர் . இலக்கிய கறார் பேர்வழியான சி.சு செல்ல்ப்பா ஒரு முறை ஞானக்கூத்தன் கொடுத்த கவிதையை இது குப்பை என நிராகரிக்க அந்த கோவத்தில் இதர நண்பர்கள் அனைவரும் சேர்ந்து துவக்கிய பத்ரிக்கை நடை



சி மணியை ஆசிரிய்ராகக் கொண்ட இந்த நடை சிறு பத்ரிக்கையில் ஆளுக்கு கவிதை கதை என எழுதும் பொறுப்பு ஏற்க முத்துசாமிக்கு நாடகம் எழுதும் பொறுப்பு தலையில் விழுந்தது. அவர் அதை சவாலாக ஏற்று 1967ல் முதன் முதலாக காலம் காலமாய் எனும் நாடகம் எழுத நாடகம் எனும் நாலெழுத்து அவர் கையை சட்டென கெட்டியாய் பிடித்துக்கொண்டது அப்போது பிடித்த பிடி நேற்றுதான் முழுதாய் விட்டது

அப்போது அந்த முதல் நாடகத்தை படித்து விட்டு அபத்த நாடகம் என புகழந்த்னர். அப்படியொரு வார்த்தையை அப்போதுதான் அவருக்கே தெரிய வந்தது . தொடர்ந்து அந்த பாராட்டு தந்த உற்சாகத்திலொ நாடகத்தின் பால் கவனம் செலுத்த துவங்கினார்

இதனிடையே கசடதபர பிரக்ஞை போன்ற இதழ்கள் இலக்கியம் தவிர்த்து நவீன ஓவியம் ,நவீன நாடகம் , சிற்பம் என பல துறைகளில் தமிழில் புதிய மாற்றம் தேடி பயணிக்கத்துவங்கியது ..

பிற்பாடு 1975 வாக்கில் அண்னா பல்கலை கழக்த்தில் அவரது நாற்காலிக் காரர்கள் நாடகம் ஆங்கிலத்தில் மேடையேற்றப்பட அதுவே தமிழின் முதல் நவீன நாடகம் என்ற பெயரைப் பெற்றது

தொடர்ந்து நவீன நாடகங்கள் பற்றி ஆய்வுகளைச் செய்ய நம் பண்பாடு கலாச்சாரம் ஆகியவ்ற்றிலுருந்துதான் அசலான நாடக கலையை உருவாக்க முடியும் என நம்பிய முத்துசாமி திவிரமான தேடலை துவங்கினார் கன்னட த்தில் யக்‌ஷ்கானம் கேரளாவில் மோகினியாட்டம் கத களி என பல வடிவங்களை தேடி போனார் ஆனால் எதிலும் திருப்தி வரவில்லை .

அப்போதுதான் அவருக்கு கூத்து எனும் பாரம்பர்ய தமிழ்க்கலை பரிச்சயமானது அதில் சிறந்து விளங்கிய வட ஆற்காடு மாவட்டம் செய்யாறுக்கு அடுத்த புரிசை கிராமத்துக்கு சென்று கண்னப்ப தம்,பிரான் எனும் கூத்து கலைஞரை சந்தித்து அக் கலையை முழுவதுமாக கற்றுத்தேர்ந்தார். .. இயல் இசை நாட்டியம் என மூன்றும் இணைந்த இக்கலைதான் தான் தேடியலைந்த நாடக வடிவம் என கண்டுபிடித்து சென்னைக்கு வந்து அத்ற்காக ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என நண்பர்களுடன் ஆலோசனை செய்கிறார். சி மணி சச்சிதானந்தம் , ஞானக்கூத்தன் , வீராச்சாமி, க்ரியா ராமகிருஷ்ணன் என பலரும் ஆலோசித்த போது வீராச்சாமி எனும் நண்பர்தான் கூத்துப் ப்ட்ட்றை என்ற பெயரைச் சொல்ல அதையே வைக்க்லாம் என ஏகமனதாக அனைவரும் முடிவெடுக்கின்றனர் இப்படியாக 1981ல் துவக்கப்ப்ட்டதுதான் கூத்துப்பட்டறை எனும் நாடகத்துக்கான தனிப்பெரும் இயக்கம்

இதை துவக்கிவிட்டாரே தவிர இதில் நடிக்க பலரை அழைக்க தொழில் முறை நடிகர்கள் யாரும் வரவில்லை என்னமோ கூத்தாம் பட்டறையாம் .. இதெல்லாம் எதுக்கு என முகம் சுளித்த்னர் . முத்துசாமிக்கு அப்போது உதவிசெய்தது அஞ்சல் அலுவலக ஊழியர்கள் தான் அவர்கலை வைத்து விடுமுறை நாட்களில் ரிகர்சலை துவங்கினார் முத்துச்சாமி, ரிகர்சலுக்கும் தோதாக இடம் கிடைக்கவில்லை .. இப்படியாக ஆரம்பநாட்களில் அவர் பட்ட கஷ்டங்கள் பல ..

ஒருநாள் கிருஷ்ண கான சபாவில்; நாடகம் சம்பந்தமான விழா ஒன்றில் கூத்து எனும் நமது பார்4அம்பர்யக்கலை பற்றி பேசப்போக பேஷ் பேஷ் என் தொடை தட்டி பழக்கப்ப்ட்ட சாஸ்திரிய ரசிககுஞ்சுகளுக்கு அதிர்ச்சி, என்ன இது சபாவில் வந்து கூத்து அது இன்னுட்டு என முகம் சுளித்து அவரை மேடையை விட்டு கீழிறங்கச்சொல்லி எதிர்ப்பை தெரிவித்த்னர். அந்த நேரத்தில் சட்டென மேடைக்கு வந்த இயக்குனர் கே . சுப்ரமணியத்தின் மகள் பத்மஸ்ரீ நடன மணி பலா சரஸ்வதி அவர் சொல்ல வ்ர்றது முக்கியமான விஷ்யம், அதை காதுகொடுத்து முதல்ல கேளுங்கோ என சொன்னபிறகுதான் அனைவரும் சமாதானமடைந்த்னர்

இப்படியாக பல போராட்டங்களௌக்கிடையே கலச்சார மாற்ரங்களை நவீன் நாடகத்தின் வழி முன்னெடுத்தார். சில நாடகங்களை அவரே எழுதினார் சிறுகதை எழுதிய நவின் இலக்கிய பின் புலம் அவரது நாடகங்களுக்கு வசீகரத்தையும் தீவிர புனைவையும் உருவககியது . சிலர் முத்து சாமியின் நாடகங்களை புரியவில்லை என்றார்கள் .. ஏமாற்று என்றார்கள் .. நாடகமே இல்லை என்றார்கள் .. ஆனாலும் முத்துசாமி தன் நாடகங்களை ரசித்த சிறு கூட்டங்களுக்காக தொடர்ந்து சோர்வில்லாமல் எழுதி இய்க்கவும் செய்தார். சுவரொட்டிகள் , உந்திச்சுழி , கட்டியக்கரான்,, நற்றுணையப்பன் , தெனாலிராமன், படுகளம் என அவரது நாடகங்கள் படிப்படியாக தமிழ் சூழலில் புதிய ரசனையை உருவாக்கி தமிழ் நாடக உலகில் அழுத்தமான தடம் பதித்தன. பல புதிய நாடக்குழுக்கள் கூத்துப் பட்டறை பாணியில் உருவாகின

இப்படியாக நாடகத்தின் வழி தொன்மத்திற்கும் புதுமைக்கும் பாலமிட்ட முத்துச்சாமி தன் கூத்துப்பட்டறை நடிகர்களுக்காக சில வினோதமான பயிற்சிகளை ஆயிவின் வழி மேற்கொண்டார் . நடிகனின் உடற்பயிற்சியாக பார்ம்பரய விளையாட்டான கோலி பம்பரம் கோலாட்டம் சிலம்பம் குத்து வரிசை பொன்ற விளையாட்டின் சூட்சுய்மங்களை பயன்படுத்திய போது அனைவரும் அந்த விளையாட்டிற்கு பின்னிருக்கும் உடல் பாவங்களை க்கண்டு ஆச்ர்யப்படுத்தினர் . பறை இசை மற்ரும் நானாவித தால வாத்தியப்ப்யிற்சி . நாட்டுப் புற கலைகளான தேவராட்டம் , ஒயிலாட்டம் பொன்ர ஆட்டங்களிலிருந்தும் த்னது நடிப்புக்கான பயிற்சிகளை கண்டறிந்து த்னது பட்டறை மாணவர்களுக்கு பயிற்ர்வித்தார்

கூத்துப்பட்டறை எனும் பெயர் தீவிர இலக்கிய உலகில் மதிப்பு வாய்ந்த பெயராக மாறத்துவங்கியது .. த்னது நடிகர்களை டெல்லி தேசிய நாடக் பயிற்சி பள்ளிக்கும் இதர மாநிலங்களின் முகாமுக்கும் அனுப்பி நாடகக்கலையில் புதுமைகளை வளர மெனகெட்டார்

அவரது இந்த நடவடிக்ககளால் கலையார்வமிக்க சிறந்த நடிகர்கள் அவரை தேடிவரத்துவங்கினர் . கருண பிரசாத் , ராஜ்குமார் தொடர்ந்து கலைராணி பசுபதி , குமாரவேல்,,ஜார்ஜ், ஜெயக்குமார், நடிப்புக்கலையின் மீது பேரார்வம் கொண்ட பெரும் படையே கூத்துப்ப்ட்டறௌயில் முகாமிட்டது அங்கேயே தங்கி பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ள த்துவனக்க நாளாடைவில் செலவும் அதிகமாகியது . அன்றைக்கு மட்டுமல்ல இன்ரைக்கும் நவின நாடகம் என்றால் காசுகொடுக்க ரசிக் சமூகம் மூக்கில் நீரைக்கொட்டும். ஒரு கட்டத்துல் டாஃபே வேலையும் போனது

இச்சமயத்தில் போர்டு பவுண்டேஷன் அவரது கலை தியாகத்திற்கு தோல் கொடுக்க முன்வர கூத்துப்ப்ட்ட்றை முன்னிலும் சுறுசுறுப்பானது

பசுபதி ஜெய்ராணி குமாரவெல் ஜார்ஜ், போன்றவர்கள் சினிமாவில் த்லையெடுக்க துவங்கினர் . அவர்களது வித்யாசமான நடிப்பால் ஈர்க்கப்ப்ட்ட திரைத்துறைக்கு கூத்துப்ப்ட்ட்றை பெயர் பரிச்சயமாகத்துவங்கியது

யாராவது வீர இலக்கியம் பேசினால் கண்னிலும் தோற்ரத்திலும் தமிழ் தொன்ம அடையாளத்தோடு காணப்ப்ட்டால் அவர்களை கூத்துப் ப்ட்டறை நடிகர்கள் என அடையாளமிடதுவங்கினர் அதுவரையிலான நிதியுதவிகள் நிறுத்தப்ப்ட கூத்துப்பட்ட்றை நடிப்பு பயிற்சி வகுப்புகளை துவக்கியது

பல முதும்கங்கள் புகுந்த்னர் வெளியேறும் போது விமல் வித்தார்த், விஜய் சேதுபதி என பெயர் பெற்றனர்

இன்று கூத்துப்ப்ட்ட்றை நடிப்புகலையின் கோயிலாக திரையுலகமே அண்னாந்து பார்க்கும் உயரங்களை எட்டியிருக்கிறது

சினிமா அல்லாமல் நாடக்த்துறையில்; ஜெயராவ்,, மீனாட்சி, சந்திரா, தம்பி சோழன், விழுதுகளை உருவாக்கி ஆலமரமாக விரிந்துகொண்டிருக்கிறது

முத்துசாமியின் மகன் நடேஷ் சிறந்த ஓவியர் மட்டும்ல்லாது சிறந்த நாடக ஆசிரியரும் கூட அவர் இருக்கும் நம்பிக்கையில் நடிப்புக் கலையின் பீஷ்மர் தன் இறுதிப் பய்ணத்தை மேற்கொண்டிருக்கிரார்

முத்துசாமி யின் நாடகங்கள் அனைத்தும் தொகுப்பாக போதிவனம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது .ந. முத்துசாமியை இன்னும் கூடுதலாக புரிந்துகொள்வத்ற்கும் . நாடகக்கலை சார்ந்து தேடல் உள்ளவர்களுக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டி

----------------------------------------
அஜயன் பாலா
அக்டோபர் 31, 2018

எழுதியவர் : (5-Feb-19, 3:08 pm)
பார்வை : 69

மேலே