காலத்தின் கொடுமை

சர்வர் : சார் ...உங்களுக்கு விருப்பமானத மெனு பாத்து ஆர்டர் பண்ணுங்க .....
சாப்பிட வந்தவர் : எனக்கு பிடிச்ச கேல் வரகு கழியும் கருவாட்டு கறியும் மெனுவில காணலய ...
சர்வர் : இல்ல தான் ....மொதலாளிகிட்ட சொல்லி சேத்துக்க சொல்லரன் .....
சாப்பிட வந்தவர் : மொதல்ல பண்டாரிய விசாரிச்சுக்க அப்பறமா மொதலாளிகிட்ட சொல்லு ..கடசியா
மெனுவ சரிபண்னிட்டு எனக்கு சொல்லி அனுப்பு ...இந்தா என்னோட கொல்லி மலை
அட்ரஸ்சு !

___________________________________________________________________________________________________________

நீதிபதி : என்னா நடக்குது இங்க ....ரெண்டு வக்கீலும் மாமன் மச்சான் சண்டை போடமாறில்ல இருக்குது !
பிரதிவாதி வக்கீல் : அதுவொன்னுமில்ல உவர் ஹானர் ...நாங்க ரெண்டு பேரும் பாட் டைம்மா சினிமாவுல நடிக்க
இருந்த காட்சிய ஒத்திகை பாத்துகிட்டு இருந்தம் ...நீங்க சிவ பூஜையில கரடி பூந்த மாறி உள்ள
நொலைஞ்சிட்டீங்க .......
_____________________________________________________________________________________________________________

வியாபாரி : பாய் ..பாய் ..பண ஓல பாய் .......பணத்துக்கு பணம் கொடுக்கும் பணப் பாய் !
வீட்டுக்கார அம்மா : என்ன வெல பணப் பாய் .....
வியாபாரி : நீங்க இஸ்ட பட்டத கொடுங்க ..பாயும் உங்களுக்கு அது இஸ்டம் போல கொடுக்கும் !
வீட்டுக்கார அம்மா : நீ சொல்லரத எப்படி நம்பரத்து ......
வியாபாரி : அடுத்த தெரு ஜமிந்தாரு சிபசேனா படுத்து தூங்கன பாயாருக்கும் .....கேட்டு தெரிஞ்சுக்குங்க .....!

______________________________________________________________________________________________________________

தலைமையாசிரியர் : கோகுலன் ....நீங்க வகுப்புல யோகா கிலாஸ் நடத்தரீங்களா அல்லது மாணவர்களுக்கு
தூங்க கத்துக் கொடுக்கிரீர்களா !

கோகுலன் - வகுப்பாசிரியர் : குரு வணக்கம் செய்ய சொல்லி மௌனமா சின் முத்திரை இட்டு
உங்கலோட பெயர ஜெபிக்க சொன்ன சார் ....மாணவர்கள் வழக்கமா நல்ல படியா
செஞ்சிகிட்டு வராங்க சார் !
தலைமையாசிரியர் : ஓஹோ ..... பரவாயில்லயே .....

எழுதியவர் : (15-Feb-19, 9:16 pm)
Tanglish : kaalaththin kodumai
பார்வை : 116

மேலே