காகிதம்

ஒருவேளை மாயையாய் மரணித்தேன் எனில் எது என்னால் இம்மண்ணில் உயிர்வாழும்,
பேதைக்காதல் கொண்டு சேர்த்த காகிதங்களா,
போதைக்கொண்டு உதிரம் தெறித்த சில ஜீவன்களா,
எல்லாம் மாறினாலும் என்றும் மாறாது என்மேல் திணிக்கப்பட்ட எண்ணங்களா,
பலவாறு தீட்ட நினைத்து ஒருவகையிலும் தீட்ட இயலாத என்னுள் புதைந்த சபல வண்ணங்களா,
புரிதல் கொள்ள நினைக்கையிலேயே புரியாது மாயையாய் மரணித்தேன்...

எழுதியவர் : (24-Feb-19, 12:10 am)
சேர்த்தது : தரன் சேகர்
Tanglish : kaakitham
பார்வை : 39

மேலே