அமரவைக்கும்
உருவாக்கும் சிற்பியால்
உடைபடும் கல்
கெளரவம் பார்க்காது
கோபம் ஏதும் கொள்ளாது
அமைதி காக்கும்
ஆண்டவனாய் உருமாறும்
கெளரவம் பார்த்தால்
காரியம் கைகூடுமா?
உடைபடாத கல் சிலையாகுமா?
உருகாத பொன் நகையாகுமா?
பிசையாத மண் பாத்திரமாகுமா?
பிச்சைக்காரனுக்கு உதவதான் முடியுமா?
வழிமறிக்கும்
வீண் கெளரவத்தை அகற்றி
நம்மை நாமே செதுக்கி
நம் திறனை சீர்படுத்தினால்
நம்மையும் இறைவனைப்போல்
நல்லுள்ளங்களில் அமரவைக்கும்