உன் பொழுது
எல்லாப் படிமங்களிலும் நீதான்
என் கனவுச் சாயல்களைக் கவர்ந்து
கடை விரிக்கிறாய்...
விலை கேட்டு பேரம் பேசி வியர்க்கிறேன்...
விடுவதாகவும் இல்லை விற்பதாகவும் இல்லை...
விடிய விடிய விழித்து சிவந்த கண்ணுக்கு
நந்தியாவட்டையாவது கொடு...
ஒற்றி எடுப்பது உன்பாடு...
பொருள் சேர்ப்பதே உன் பொழுது...
பொருளும்,பொழுதும்
நான்தான் என்பது என்றுதான் விளங்குமோ...
இன்னுமா கடையில்...!!!
காலை வணக்கம் ......