காதல்

பெண்ணே உந்தன் கண்களிரண்டும்
காதல் கவி பாடின களிநடம் புரிந்து
கவிஞன் நான் கவி பாடவும் மறந்து
காதல் வயப்பட்டு உந்தன் ரசிகனானேன்
நீ புன்னகைத்தாய் புன்னகையின் ஆயிரம்
அர்த்தங்கள் என்னை அஸ்திரம்போல்
கட்டிவிட உந்தன் அழகின் ரசிகனானேன் நான் ,
உந்தன் காதலனானேன் இனி என்னென்று
பாடுவேன் நான் கவிஞனாக பாடும் பொருள்
நீயே கவிதையான பின்னே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Mar-19, 10:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 166

மேலே