அவள்தான் அன்னை

சின்னக் குழந்தைக்குப்
பல்லது முளைத்தால்,
அன்னை மார்பில்
அறிகுறி தெரியும்..

சின்னப் பெண்ணாள்
தானே சிரித்தால்,
அன்னை அறிவாள்
அவளின் நிலையை..

அன்னை என்பவள்
அறிவாள் எல்லாம்,
உன்னைப் பெற்றதால்
உன்குணம் அறிவாள்..

மன்னன் ஆயினும்
மகனே ஆவான்,
அன்னைக் கீடு
அகிலமே யிலையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Mar-19, 7:25 am)
Tanglish : avalthan annai
பார்வை : 88

மேலே