விபத்தும்_மரணமும்

#விபத்தும்_மரணமும்
************************
விபத்தின் வழியே
--------- விதியை நொந்து
அங்கம் இழப்பதையும்
-------அடையாளம் போவதையும்
மானிடனே நினையாமல்
---------மாண்டு போவதேன்
வீதியில் வாகனங்கள்
----------வியப்பாய் வளர்ந்தாலும்
மானிடனே விவரமின்றியே
--------மந்தமாய் நோக்காதே
உண்மையை உணர்ந்தே
----------உள்ளத்தில் நிறைத்துவிடு
வீதியிலே விக்கினமின்றி
-----------விரைந்தே செல்லலாமே
விலையில்லா பொன்னென்றே
----விலைமதிப்பான உயிர்களை
நோக்கியே பயணித்தே
---------நோகாமல் பயணிப்போம்
உலகெல்லாம் வீதியிலே
-----உயிர்கள் சுகம்காணும்
வீதியில் விபத்தாய்
--------விரயமாகும் ரத்தங்களாய்
கண்ணீரின் அழுக்கையோடு
------கிடைக்கும் கரங்களின்
ஏற்ற துணைகளும்
-----எறிந்தே கிடக்க
வேதனையும் துன்பமும்
------வெறுத்தே கசக்குமே
தற்காப்பு அரனாய்
---தாங்கியே நடப்போம்
விபத்தையும் மரணத்தையும்
------விரைவில் தள்ளுவோம்
விபத்தை தேடிபோகமால்
-----மரணத்தையும் தடுப்போம்
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (5-Mar-19, 11:14 am)
பார்வை : 76

மேலே