மனக்கூற்றின் மொழியாய் அணங்கே

இம்சை படுத்துகிறாய்
நீ! நீயென்றால்
நீ மட்டுமல்ல ...
இந்த எழுத்தும்
கவிதையும் கூட...
ஞாபக சுருக்கங்கள்
அற்று இம்சிக்சிக்கிறது
இரவுகள்....
காண்டுகொண்ட
நீயும் ஈங்கில்லை
காணாத காலமும்
உடனில்லை....
தேடி மெய்த்திடும்
அந்த நிழல்
நின்று உறவாடும்
என் நிழலுடன் ..
வாய் பிளக்கட்டும்
சில சூரியன்கள்
நீயென்ற அந்த
நிலவொளி
என் மீது மட்டுமே
பதியக்கண்டு..
காத்திருப்புகளில்
மட்டுமே நேர் நிற்கிரது
கலவி உடற்கூற்றின்
வியர்வை யல்ல..
அது மனதின் மொழி
நீ! வருவாயென...
மீண்டும்
மீண்டும்....

எழுதியவர் : சுரேஷ் குமார் (10-Mar-19, 11:42 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 218

மேலே