உன் சுவடு

தேர் உருளும்
தெரு முனையில்
தேவதையே
நீ நடந்தால்...

காரிருளும்
கதிர் பாய்ச்சும்
காளையர் கண்
கவி பேசும்...!

நீ நடந்த
கால் தடத்தில்
நாவிழுந்து நசுங்கையிலே

என்
நா சிந்தும்
கவியெல்லாம்
நானிலமும் போற்றுதடி...!

எழுதியவர் : பா.முப்படை முருகன் (16-Mar-19, 2:24 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : un suvadu
பார்வை : 207

மேலே