நீ சென்ற பிறகும் உன்னோடு நான்

காதல் என்பது மனதில் பட்ட ஒரு தழும்பு. அது எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும். காதலில் வெற்றி அடைந்தவர்களுக்கு அது பெரிதாக தெரியாது. ஆனால் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு அந்த தழும்பு சில வலிகளை தந்து கொண்டே தான் இருக்கும். ஆரிய பின்பும் வலியை தரக்கூடிய ஒரே புண் காதல் தான். காதலில் பிரிந்த காதலனோ காதலியோ தன் காதல் நினைவுகளோடு பல நாட்களை கழித்த பின்பு ஏதோ ஒரு நிர்பந்தத்தாலோ அல்லது காரணத்தாலோ வேறொருவரை மனக்கின்றனர். ஆனால் அப்படி மணந்த பின்பும் காதலின் தழும்பு ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு உறுத்திக்கொண்டே தான் இருக்கும். வாழ்வின் இறுதிவரை அவர்களுக்கு காதல் ஒரு சுமையாகவே மாறிவிடும்.

எழுதியவர் : வினோத் குமார் தி (26-Mar-19, 4:17 pm)
சேர்த்தது : வினோத் குமார் தி
பார்வை : 531

மேலே