தலையெழுத்து கவிஞர் இரா இரவி

தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !

கற்பிக்கப்பட்ட கற்பனை
கட்டுக்கதை உண்மையன்று !

முடிவெட்ட தலை தராதவன்
முழுவதும் எழுதிட தந்திருப்பானா ?

வாழ்நாள் முழுவதையும் எழுதிட
தலை என்ன காகித ஆலையா ?

காலங்காலமாக பலரும்
கதைத்து வந்த பொய் !

அப்படி ஒன்றும் இல்லை
அறிந்திடுக தெரிந்திடுக தெளிந்திடுக !

தலையெழுத்தின் மொழி என்ன
தெரியுமா உங்களுக்கு வாசிக்க !

விதி என்று ஒன்றுமில்லை
மதியால் சிந்தித்து சிறந்திடலாம் !

மனிதர்களுக்கு மட்டும்தானா விதி ?
மற்ற விலங்குகளுக்கும் உண்டா ?

தலையில் படப்பிடிப்புக் கருவியில்
தலை எழுத்து அகப்படவில்லை !

இறைவன் எழுதியது என்றால்
இறைவனுக்கு இதுதான் வேலையா ?

இல்லாத ஒன்றான தலையெழுத்தை
இருப்பதாக எண்ணி வருந்தாதீர் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (31-Mar-19, 4:09 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 127

மேலே