கல்லா அறிவிற் கயவர்பால் கற்றுணர்ந்த நல்லார் தமதுகனம் நண்ணாரே – நன்னெறி 25

நேரிசை வெண்பா

கல்லா அறிவிற் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமதுகனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புணையில் புகும்ஒண் பொருள். 25 - நன்னெறி

பொருளுரை:

வில் போன்ற புருவங்களை உடைய கரு விழியாளே!

பெரும் பாரமுள்ள பொருளும், தெப்பத்தில் சேர்ந்தால் தன் வலிமை குறைந்து விடுவதைப் போல, கல்வியறிவு இல்லாத கீழோரிடம் சேர்ந்த உயர்ந்தோர் பெருமையும் வலுவில்லாததாகி விடும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-19, 10:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

மேலே