ஏய் மனிடமே முயற்சி செய்
நெல்லை வேரில் விளைய வை
கிழங்கைக் கிளையில் காய்க்கச் செய்
கரும்பைக் காரச் சுவையில் காட்டு
இரும்பை இல்லந்தோறும் பயிர் பண்ணச் செய்
தங்கத்தைத் தண்ணீரில் கரைக்கக் கற்றுக் கொடு
கல்லைக் கருப்பட்டியாய் மாற்று
எண்ணெயை மணலில் இருந்து பிழி
குருதியின் நிறத்தை குணத்திற்கு ஏற்ப மாற்று.
--- நன்னாடன்