தான் தோன்றி தமிழ் மொழி

எள்ளலும் துள்ளலும் நிறைந்ததடா எம்மொழி
எல்லா மொழிக்கும் மூத்ததடா
சொல்லுக்கு சூத்திரம் கண்டதடா
சுயமாக மொழியாய் ஆனதடா
எல்லாவற்றையும் சேயாய் பார்ப்பதினால்
எதிரிகள் என்பது இல்லையடா
எம் மொழி இதனுள் புகுந்திடுனும்
செம்மொழிச் சிறப்பாய் வாழுமடா
வானும் மண்ணும் தோன்றும் போதே
வளமான பெயரை அதற்குத் தந்ததடா
ஐம்பெரும் பூதங்கள் உள்ள வரை
அனைவரையும் அரசாண்டு வாழுமடா .
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Apr-19, 10:01 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 385

மேலே