வீழ்த்தலாமென்று நினைத்தாயோ
வீழ்த்தலாமென்று நினைத்தாயோ....
அதிகார தோரணையில்
அடக்கிட நினைத்தாயோ...
அன்புகாட்ட மறந்து அடிமையாக்க எத்தனித்தாயோ...
வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து வென்றிடுவாயோ....
பணம் கொண்டு பாசத்தின் திறவுகோல் செய்திடுவாயோ....
கோபக்கோரங்கள் கொண்டு ஒப்புரவு நிகழ்த்திடுவாயோ.....
அனுசரனையின் அர்த்தமறியாமல் ஐக்கியமென்னும் அற்புதம் நிகழ்த்திடுவாயோ....