நினைத்தேன் வந்தாய்

ஆயிரம் உறவுகள் என் அருகே ,
ஆனால் நானோ கனவின் மத்தியில்
தேனாய் இனிக்கும் நிலவும்
தெள்ளமுதாய் உரசும் தென்றலும்
கானான் தேசத்து கானல் நீராய் ,
கண்டதும் காணாமல் போகிறாய்
கண் மூடாமல் கனவில் திளைக்கிறேன் ,
அருகே நீ இல்லாமல் போகலாம்
ஆனால் அன்பே என் விழிகளில் கலந்தவன் நீ ,
என் உதிரத்தில் நிறைந்தவன் நீ
கை நீட்டி காற்றில் தேடுகிறேன் ,
எண்ணில் நிறைந்தவனின் வாசம் தேடி
திகட்டாத தித்திப்பு நீ , தீ மூட்டும் அதிசயம் நீ ,
குளிரில் கதகதப்பும் நீ
என்னதான் சொல்லி கவிதை செய்வேனோ
ஆறடி அழகாய் நீ நிற்கையில்
உன்னை நான் நினைத்துக்கொண்டே இருக்கையில்
அசந்து நன் உறங்கிட திருடன் போல் எட்டிப்பார்க்கிறாய்
எந்தன் சொப்பனத்தில் ,நினைத்தேன் வந்தாய் !!!

எழுதியவர் : ஹேமாவதி (11-Apr-19, 8:37 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : ninaithen vanthai
பார்வை : 240

மேலே